Sunday, March 05, 2006

பிரார்த்தனை

செப்புக் குடம்
சிறு குழந்தை
சிவந்த உதட்டைப்
பிரித்தது சிரிப்பு

வட்டக் குழலாய்
வாழ்க்கைச் சக்கரம்
நகர்ந்து போன
பாதைத் தடம்

சுட்டுச் சுடுகாடாக்கி
வெட்டி விழுத்தி
விதி என்றே
நடந்து போகும்

மண்ணிற்குள்ளும்
மனதிற்குள்ளும்
புதைந்து போன
அனுபவத்தின்
எச்சங்கள்

வாசிக்கும்போதும்
சுவாசிக்கும்போதும்
மூச்சடங்கி
முகமழிந்து
போகாதிருக்க

பிரார்த்தனை செய்தது
உடைந்து போன
கலயத் துண்டு.

No comments: