செப்புக் குடம்
சிறு குழந்தை
சிவந்த உதட்டைப்
பிரித்தது சிரிப்பு
வட்டக் குழலாய்
வாழ்க்கைச் சக்கரம்
நகர்ந்து போன
பாதைத் தடம்
சுட்டுச் சுடுகாடாக்கி
வெட்டி விழுத்தி
விதி என்றே
நடந்து போகும்
மண்ணிற்குள்ளும்
மனதிற்குள்ளும்
புதைந்து போன
அனுபவத்தின்
எச்சங்கள்
வாசிக்கும்போதும்
சுவாசிக்கும்போதும்
மூச்சடங்கி
முகமழிந்து
போகாதிருக்க
பிரார்த்தனை செய்தது
உடைந்து போன
கலயத் துண்டு.
Sunday, March 05, 2006
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment