ஒற்றைச்
சபலத்தின்
ஓர வெடிப்பில்
விம்மிப்பரவும்
பெருவெளியில்
ஒரு துளியாய்
மூடிய
சிப்பியின்
முதுகில் வழியும்
நீர்த் தாரையாய்
நீளும்
கற்பங்களை
நிமிர்த்திக்
கழியும்
பிரயத்தனத்தில்
பகலும் இரவும்
பாதித்
தூக்கமும்
பசியுமான
விளங்கமுடியா
மர்மத்தின்
முடிச்சில்
காலடி தெரியா
கற்பத்தின்
இருட்டைப்போல்
காலக்
கணிதத்தின்
கழித்தலிலும்
கூட்டலிலும்
சுற்றிச் சுழலும்
புழுவைப்போல
நகர்ந்து போக
நீள்கிறது
வாழ்க்கை.
Wednesday, April 05, 2006
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment