உனக்காக
ஒன்று சொல்வேன்
நதியில்
நீர் இருப்பதும்
கடலில்
அலை இருப்பதும்
வானில்
நிலவு இருப்பதுவும்
மலரில்
நிறம் இருப்பதுவும்
உடலில்
உயிர் இருப்பதுவும்
அழகு தான்
அது போல்
மண்ணில்
நீயிருப்பதும்
உனக்காக
ஒன்று சொல்வேன்
உயர்வும் இல்லை
தாழ்வும் இல்லை
நிறமும் இல்லை
நிந்தனை இல்லை
மதமும் இல்லை
குணமும் இல்லை
இருப்பது,
ஒரு வாழ்க்கை
ஒரு உயிர்
புரிந்தால்
துக்கமில்லை
அறிந்தால்
துயரமில்லை
நினைந்தால்
போருமில்லை
உணர்ந்தால்
சிறுமை இல்லை
உனக்காக
ஒன்று சொல்வேன்
இருப்பது,
ஒரு வாழ்க்கை
ஒரு உயிர்.
Saturday, January 21, 2006
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment