அச்சு இயந்திரத்தின் அழுத்தத்தில்
நச்சு மையின் வாசனையில்
என்னை நானே பார்க்கையில்
எண்ணம் தொலைத்து நிற்கின்றேன்
கருப்பையில் கவி உணர்ந்தவன்
கனவினில் தினவு சேர்த்தவனோ - இல்லை
கழனியில் ஏர் உழுதவன்
களைப்பினில் மலர்ந்து கொண்டவனோ
வாழ்க்கையில் இடறி விழுந்தவன்
வார்த்தையில் வடிவம் எடுத்தவனோ -இல்லை
தலையினில் சுடர் சூட்டியவன்
எச்சியினில் உமிழ்ந்து வழிந்தவனோ
பிய்த்துப் போட்ட யோனியில்
பிறந்த உதிரத் துளிகளோ - இல்லை
குதறிப் பறித்த வாழ்க்கையின்
குவிந்து போன துயரமோ
வார்த்தை நல் ஜாலங்களில்
வந்துதித்த குறைப் பிறப்போ -இல்லை
தத்துவத்துக்கு தலை கொடுத்தவன்
தயவில் வந்து தொலைத்தவனோ
யாரோ ஆயினும்,
என்னைப் படிக்கையில் உன்
எண்ணம் பொங்கி எழுவதுவும்
இறுக்கி மூடுகையில் உந்தன்
இமைகள் நனைந்து வழிவதுவும்
என்னை நானே கவிதை
என்றே சொல்லப் பெருமிதமே.
Friday, February 24, 2006
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment